(நெவில் அன்தனி)
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் சுழல்பந்துவீச்சாளருமான மலிந்த புஷ்பகுமார முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்களைக் கைப்பற்றி மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இந்த மைல்கல் சாதனையை நிலைநாட்டினார்.
லும்பிணி கல்லூரியின் பழைய மாணவரான மலிந்த புஷ்பகுமார இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஆவார். அவர் தற்போது பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.
முவர்ஸ் கழகத்துடனான போட்டிக்கு முன்னர் 172 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 998 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்த 38 வயதான மலிந்த புஷ்பகுமார, இந்த போட்டியில் பசிந்து சூரியபண்டாரவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் 1000 முதல்தர விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.
அப் போட்டியில் அவர் மொத்தமாக 1005 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதற்கு அமைய மலிந்த புஷ்பகுமார இதுவரை 173 போட்டிகளில் விளையாடி 100?? விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியுள்ளார்.
முத்தையா முரளிதரன் (232 போட்டிகளில் 1374 விக்கெட்கள்), ரங்கன ஹேரத் (270 போட்டிகள், 1080 விக்கெட்கள்), தினூக்க ஹெட்டிஆராச்சி (234 போட்டிகள், 1000 விக்கெட்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 1000 முதல் தர விக்கெட்களைப் பூர்த்தி செய்த நான்காவது வீரர் மலிந்த புஷ்பகுமார ஆவார்.
சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பிறீமியர் லீக் ஏ அடுக்கு கிரிக்கெட் போட்டியில் 37 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அப்போது அவர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடினார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM