(செ.சுபதர்ஷனி)
மாலிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் முறையற்ற நடத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஜனவரி 21ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 22ஆம் திகதி காலை 8.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாலிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவரை தற்காலிகமாக பதவி நீக்க செய்ய வேண்டும் எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு பலமுறை எழுத்துப்பூர்வமாக அறிவித்தும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 140 வைத்தியசாலைகளில் பணிப்புரியும் கதிரியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 21 ஆம் திகதி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். இதனால் அன்றையதினம் கதிரியல் சிகிச்சை சேவைகள் முற்றிலும் ஸ்தம்பிக்க உள்ளது. சிரி ஸ்கேன்,எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ்ரே , மெமோகிராம் மற்றும் அறுவை சிகிச்சைகள் கூட இதனால் முடங்கக் கூடும்.
எவ்வாறாயினும் நோயாளர்களைக் கருத்தில் கொண்டு புற்றுநோய் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சை பிரிவுகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM