இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட Lanka Ride சைக்கிள் போட்டியின் மூன்றாவது நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணிக்கு அனுராதபுரம் நகரில் ஆரம்பமானது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் இந்த போட்டி ஆரம்பமானது.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்ய ஸ்ரீ ஹேரத், அனுராதபுரம் மேயர் என். கருணாரத்ன, மாகாண பொலிஸ் தலைவர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் குழு உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று சனிக்கிழமை (17) சிறப்பாகச் செயல்பட்ட சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இதில் இலங்கை இராணுவ அணியின் தடகள வீரர் ஏ.டி.எஸ். பெரேரா, மூன்று பதக்கங்களை வென்றமை சிறப்பம்சமாகும்.
நேற்று, ஜா-எல ஃப்ளாஷ் அணியின் தேஷன் கவிந்தவுக்கு 23 வயதுக்குட்பட்ட சிறந்த இளம் சைக்கிள் ஓட்டுநர் என்ற பதக்கம் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டி தற்போது புத்தளம் வழியாக கொழும்பை அடையவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM