அனுராதபுரம் மற்றும் மடுல்சீமை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம் விமான நிலைய வீதியில் வன்னியன்குளம் பகுதியில், இடம்பெற்ற வீதிவிபத்தில் வெள்ளிக்கிழமை (16) ஒருவர் உயிரிழந்துள்ளார்.விமான நிலையத்தை நோக்கிச் சென்ற கார், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது பாதசாரி காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மடுல்சீமை - பசறை வீதியில் மாலிகாதென்ன நோக்கிச் செல்லும் துணை வீதியில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (16) இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மடுல்சீமை, வெருல்லபத்தனை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM