(நெவில் அன்தனி)
தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பன ஆண்களுக்கான தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன ஃபுட்சால் (SAFF Futsal Championship) சம்பியன்ஷிப்பின் இரண்டாவது போட்டியில் நேபாளத்திடம் 1 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பூட்டானுக்கு எதிரான போட்டியை 3 - 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட இலங்கைக்கு இந்தத் தோல்வியினால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு தவறியுள்ளது.
பாங்கொக், ஹுவா மெக் உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற நேபாளத்துக்கு எதிரான போட்டியின் 10ஆவது நிமிடத்தில் மொஹமத் குர்ஷீத் அலாதியான கோல் போட்டு இலங்கையை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.
ஐந்து நிமிடங்கள் கழித்து நேபாள வீரர் சரோஜ் தமாங் கோல் நிலையை சமப்படுத்தினார்.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடரந்த முதலாவது நிமிடத்திலேயே மீண்டும் சரோஜ் தமாங் கோல் போட்டு நேபாளத்தை 2 - 1 என முன்னிலையில் இட்டார்.
அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த இலங்கை வீரர்கள் கடுமையாக முயன்ற போதிலும் அவை கைகூடாமல் போனது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM