போலி ஆவணங்களுடன் இருவர் கைது

Published By: Priyatharshan

26 Aug, 2017 | 10:14 AM
image

ராகமைப் பகுதியில்  போலி ஆவணங்களுடன் இருவர் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள், முத்திரைக் குறியீடுகள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள், மோட்டார் வாகன பதிவு சான்றிதழ்கள், பல்வேறு நிறுவனங்களின்  கடித தலைப்புக்கள், தபால் அடையாள அட்டைகள், மற்றும்  வாகன இலக்கத் தகடுகள் ஆகியவற்றுடனேயே இருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக   பொலிஸ் ஊடகப் பேச்சாளர்   பொலிஸ் அத்தியட்சகர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

51 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள்  ராகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும்  ஒரு சந்தேகநபர்  களனிப்பிரதேச செயலகத்தில்  சாரதியாகப் பணியாற்றி  ஓய்வு பெற்றவர் என்றும் மற்றையவர்  ஓய்வு பெற்ற இராணுவ வீரர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக  பொலிஸ் . பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம்   மஹர நீதவான்நீதிமன்றில்  ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45
news-image

பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகள்...

2025-03-14 22:11:35