கருவுற்றிருக்கும் இளம் தாய்மார்களில் பலருக்கு சமச்சீரற்ற ரத்த அழுத்த பாதிப்பின் காரணமாக பக்கவாத பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கருத்தரித்திருக்கும் தருணத்தில் ஒரு லட்சத்தில்... முப்பது பெண்களுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதே தருணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை குறைந்த அளவில் அதிகரித்து வருவதாகவும் சுகாதார விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் கருவுற்றிருக்கும் தருணத்தில் பத்து சதவீதமும், பிரசவ தருணத்தில் நாற்பது சதவீதமும், பிரசவம் நடைபெற்ற பின் ஆறு வாரங்களுக்குள் மீதமுள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
முகத்தில் மாற்றம், கைகள் பலவீனமடைதல், பேசுவதில் சிரமம் ஆகியவை கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்பட்டால்... உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
கடுமையான தலைவலி, வலிப்பு தாக்கங்களுக்கான நரம்பியல் அறிகுறி, உடலில் இடது அல்லது வலது பகுதியில் பலவீனத்தை உணர்தல்... போன்ற அறிகுறியை உணர்ந்தாலும் உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
கருவுற்றிருக்கும் தருணத்தில் விவரிக்க முடியாத காரணங்களால் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டாலும் பக்கவாத பாதிப்பு உண்டாகும் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதனால் கருவுற்றிருக்கும் தருணத்தில் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வேண்டும் என வைத்தியர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
வைத்தியர் ஸ்ரீதேவி
தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM