இரு காரணங்களுக்காக தாய் தனது கருவை கலைக்க முடியுமாம் !!!!!

Published By: Digital Desk 7

25 Aug, 2017 | 01:07 PM
image

இலங்கையில் இரு காரணங்களுக்காக தாய் தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க முடியும் என அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாலியல் வன்முறையால் உருவான கரு மற்றும் மரபணு பிறள்வுக்குள்ளான கருக்களை கலைப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக கொழும்பு சுகாதார கல்விப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது சிறப்பு சமூக வைத்திய நிபுணரான வைத்தியர் கபில ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைத்திய நிபுணர் கருத்து தெரிவிக்கையில்,

“தாயொருவர் கர்ப்பம் தரித்து 20 வது வாரத்தில் சிசுவின் மரபணு பிறள்வை வைத்தியர்களால் இனங்காண முடியும் பிறப்பு குறைப்பாடுடைய பிரசவத்தினால் தாய்மார்கள் வாழ் நாள் முழுவதும் உடல், உள ரீதியாக பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

இக் குறைப்பாடுடைய பிரசவத்தால் பிரசவிக்கப்பட்ட குழந்தையும் வாழ் நாள் முழுவதும் உயிர் வாழ சிரமப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பான உத்தேச சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. பாராளுமன்றின் அனுமதி மாத்திரமே எஞ்சியுள்ளது.

குறிப்பிட்ட சட்டம் பாராளுமன்றின் அனுமதியுடன் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் அரச வைத்தியசாலையொன்றில் கருக்கலைப்புக்கான சிபாரிசுகளை உரிய இரு வைத்திய நிபுணர்கள் செய்கின்ற பட்சத்தில் கருவை கலைப்பதா?  அல்லது கருவை சுமப்பதா? என்ற முடிவை தாய் எடுக்க முடியும் ” என தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பெண்ணியல் நோய் நிபுணரான வைத்தியர் யு.டி.பி ரத்னசிறி “ இச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்கனவே அரசியல், சமூகம், மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விடயங்கள் தடையாக உள்ள போதிலும் தாய்மார்களின் துன்பத்தை போக்க இச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13