கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த காட்டு யானை பாதுகாப்பாக காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது!

13 Jan, 2026 | 11:11 AM
image

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பாதுகாப்பாக காட்டு யானையொன்று வாழைச்சேனை ஹைராத் மஸ்தான் முனையிலிருந்து ஓட்டமாவடி புகையிரத கடவையைக்கடந்து நடுத்தீவு காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கபட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) மாலை  இடம் பெற்றுள்ளது.

கல்குடா அனர்த்த அவசர சேவை (கல்குடா டைவர்ஸ் ) அமைப்பின் உதவியுடன் மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களினால்  இக்காட்டு யானையை கரையைக்கடந்து நீர் வழியாக காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக வாழைச்சைனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து  பயன்தரும் தென்னை உட்பட பல நூறு மரங்களை அழித்து நாசமாக்கி,  கிராமங்களுக்குள் நுழைந்து கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த யானையையே இவ்வாறு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07