தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக - ஹாஸ்ய நாயகனாக - நடித்திருக்கும் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பங்கு பற்றிய முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரத்யேகமாக நடைபெற்றது.
மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள' தலைவர் தம்பி தலைமையில் ' எனும் திரைப்படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். திருமண சடங்கு - மணப்பெண்- பெற்றோர்கள்- உறவினர்கள்- சண்டை - சச்சரவு - ஆகியவற்றின் பின்னணியில் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி தை திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் குடும்பம் சார்ந்த பார்வையாளர்களுக்கு உற்சாகமான அனுபவத்தை வழங்கும் என உறுதியளிப்பதால்... படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தைப் பற்றி நடிகர் ஜீவா பேசுகையில், '' இரண்டு முன் விரோதம் உள்ள குடும்பம். அவர்களின் ஒரு வீட்டு பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகிறது. அதற்கு முதல் நாள் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனை நாயகன் உள்ளே புகுந்து, எப்படி சமாளித்து தீர்வு காண்கிறான்? என்பதுதான் படத்தின் கதை. இந்தக் கதையை ஆறு வயது முதல் அறுபது வயது வரை உள்ள அனைத்து தரப்பினரும் பட மாளிகைக்கு வருகை தந்து ரசித்து கொண்டாடும் வகையில் நேர்த்தியான திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். பொங்கல் போன்ற விசேட தினங்களில் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் வகையில் இப்படம் தயாராகி இருக்கிறது. அனைவரும் இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM