எம்மில் சிலருக்கு உடலின் உள் உறுப்புகளில் தீங்கற்ற கட்டிகள் இருந்தாலும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் கட்டிகள் இருந்தாலும் அதனை உறுதிப்படுத்துவதற்கு திசு பரிசோதனையை மேற்கொள்வார்கள்.
சிலருக்கு இத்தகைய பாதிப்பு உடலின் உள் உறுப்புகளில் ஆபத்தான பகுதிகளில் இருந்தால் அவர்களுக்கு பிரத்யேகமாக திரவ வடிவிலான திசு பரிசோதனையை மேற்கொள்வார்கள் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
குறிப்பாக நுரையீரல் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் அல்லது புற்றுநோயல்லாத கட்டி பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும்.. கட்டி ரத்தநாளத்தை பாதிக்கும் வகையில் இருந்தாலும் அல்லது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பகுதியில் இருந்தாலும் அல்லது அணுக முடியாத இடத்தில் கட்டி பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் அத்தகைய நோயாளிகளுக்கு திசு பரிசோதனை திரவ நிலையில் மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அவர்களுக்கு சிகிச்சையை வழங்குகிறார்கள்.
மேலும் சிலருக்கு திசு பரிசோதனையில் உறுதியான முடிவுகள் கிடைக்காத போது.. வைத்திய நிபுணர்கள் சிறிது கால இடைவெளியில் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய திசு பரிசோதனையை இரண்டாவது முறையாக மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். அத்தகைய தருணங்களில் திரவ நிலையில் ஆன திசு பரிசோதனையும் மேற்கொள்வதற்கு வைத்திய நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள்.
வைத்தியர் பிரியா சுபாஷ் தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM