(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த சிறுமி குகனேசன் டினோஜாவின் மரணம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த போக்கால் நேர்ந்ததா, ? என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. முதுழுமையான விபரம் விரைவில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயது சிறுமி குகனேசன் டினோஜா உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த விடயம் தொடர்பில் கேள்விகளை முன்வைத்தார்.
தொடர்ந்து கேள்விகளை முன்வைத்த அர்ச்சுனா , குறித்த சிறுமி முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திகதி, நேரம். அனுமதிக்கப்பட்ட போது வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்,அந்த சிறுமி குழந்தைகள் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்ட நேரம்,அந்த வைத்தியசாலையில் இருக்கும் சிறப்பு வைத்தியர்கள், சிறுமியின் மரணம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் உள்ளிட்டவை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதன்போது எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
2025 டிசம்பர் 21ஆம் திகதி இரவு 7.20 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். இது தொடர்பில் வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்துள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட விசாரணைகள் நடக்கின்றன. இந்த மரணமானது வைத்தியசாலை ஊழியர்களின் அசந்தமந்த போக்கால் நடந்ததா? என்று விசாரணைகள் நடக்கின்றன. இது தொடர்பில் விசாரணைகள் நடப்பதால் விசாரணைக்கு பாதிப்பில்லாவாறு அறிக்கைகளை எதிர்வரும் நாட்களில் தருகின்றேன் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM