கர்ப்பபையில் தோன்றிய இயேசு ; மகிழ்ச்சியின் உச்சத்தில் தம்பதிகள்

Published By: Raam

25 Aug, 2017 | 12:22 PM
image

கருவுற்றிருந்த ஒரு பெண் தன் கர்ப்பபையில் குழந்தை வளர்ச்சியை அறிந்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அதில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்பட்டமை தொடர்பில் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

பென்சில்வேனியா பகுதியில் வசித்துவரும் நிறைமாத கர்ப்பிணியான அலிக்கா தனது கணவர் ஸ்மித்துடன் வைத்தியசாலையில் கருவில் இருக்கும் தனது குழந்தை நலமாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள சோதனை செய்துள்ளனர்.

சோதனை முடிவடைந்த பின் பரிசோதனை அறிக்கை அவர்களுக்கு அளிக்கப்பட்டது, குறித்த சோதனை அறிக்கை புகைப்படத்தில் இயேசு வடிவிலான உருவம் குழந்தையை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.

அதனை பார்த்த தம்பதியினர் என்ன செய்வது என்று தெரியாமல் மகிழ்ச்சியின் உச்சத்தினை அடைந்துள்ளனர். இதுகுறித்து ஸ்மித் கூறியதாவது, அறிக்கையை பார்த்தவுடன் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்தோம். நாங்கள் என்ன பார்த்தோம் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை.

நாங்கள் மதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள் கிடையாது, இருப்பினும் தற்போது கருவில் இருக்கும் எங்கள் குழந்தையை பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் இயேசு எங்கள் குழந்தையை பார்த்துக்கொண்டிருக்கிறார் என கூறியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை தங்களது பேஸ்புக்கில் பதிவிட்டு, அதில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பது குறித்த பதிலை தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right