இன்றைய சூழலில் எம்முடைய உணவு முறையில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றத்தின் காரணமாக திருமணமான தம்பதிகள் இயற்கையான முறையில் கருதரிப்பதற்கான சதவீதம் குறைந்து வருகிறது.
இதனால் திருமணமான பெண்கள் கருத்தரித்தவுடன் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் அதனை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். இந்தத் தருணத்தில் கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் டபுள் மார்க்கர் எனும் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கிறார்கள். இது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை பின்வருமாறு அவர்கள் வழங்குகிறார்கள்.
பெண்கள் கருத்தரித்தவுடன் அவர்களுடைய கருத்தரித்ததில் இருந்து 11 மற்றும் 13 வாரங்களில் அவர்களுக்கு வழக்கமான ஸ்கேன் பரிசோதனை மற்றும் குருதி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இத்தகைய தருணத்தில் வயிற்றில் வளரும் சிசு மரபணு குறைபாடு காரணமாக டவுன் சிண்ட்ரோம் மற்றும் எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் ஆகிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதனை தொடக்க நிலையில் கண்டறிவதற்காக டபுள் மார்கர் எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
இந்த பரிசோதனை சாதாரண குருதி பரிசோதனையாகும். உயிரி வேதியல் அடிப்படையில் பரிசோதனை செய்து குரோமோசோம்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பதை துல்லியமாக அவதானிக்க இயலும். இதனைத் தொடர்ந்து என். டி. ஸ்கேன் என்ற ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை அவதானிப்பர். பின்னர் அதற்குரிய சிகிச்சையையும் , ஆலோசனையையும் வைத்திய நிபுணர்கள் வழங்குவார்கள்.
வைத்தியர் யஸாஷ்வினி
தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM