பிரபல மலையாள நடிகை கல்பனா ரஞ்சனி இன்று காலமானார்.
தமிழ் நடிகை ஊர்வசியின் சகோதரியான நடிகை கல்பனா ரஞ்சனி தமிழில் சின்னவீடு, பம்பல் கே சம்பந்தம், சதி லீலாவதி உள்பட மலையாளம், தெலுங்கு என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபத் சென்று இருந்தார்.
நேற்று படப்பிடிப்பு முடிந்து இரவு பொழுதை கழித்தார். இன்று காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு வர வேண்டியவர் வரவில்லை. இதையடுத்து அவருக்கு பலமுறை தொலைபேசி அழைப்பு விடுத்த போதும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து நேரில் சென்று பார்த்தபோது அவர் உணர்வின்றி கிடந்துள்ளார்.
உடனே அருகில் உள்ள அப்பலோ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கல்பனா திடீர் என்று மரணம் அடைந்தது திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கல்பனா மலையாள இயக்குனர் அனில் குமாரை திருமணம் செய்து கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.
’தனிசல்ல நிஜன்’ என்ற படத்திற்காக இவர் தேசிய விருது பெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM