வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடிக்கு போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் வைத்து 100 கிராம் ஐஸ்போதைப்பொருள் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சம்பவ தினமான இரவு வாழைச்சேனையில் இருந்து பஸ் வண்டியில் வந்து பஸ் தரிப்பிடத்தில் இறங்கிய இரு இளைஞர்களை ஐஸ்போதைப்பொருளுடன் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பேத்தாழை மற்றும் வாகரையைச் சேர்ந்த 24 , 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையை காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM