வென்னப்புவ, லுனுவில கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ஜனவரி 03 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் 554 கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு டிங்கி (01) படகுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செயய்ப்பட்டுள்ளனர்.
அதன்படி, வென்னப்புவ, லுனுவில கடல் பகுதியில் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஒரு படகு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதி வழியாக நிலத்தை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அப்போது, சட்டவிரோதமாக 18 பொதிகளில் பொதிச்செய்து கொண்டு வரப்பட்ட சுமார் 554 கிலோகிராம் பீடி இலைகளும் 01 டிங்கி படகு மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் (02) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 19 மற்றும் 29 வயதுடைய கற்பிட்டியின் ஆனவாசலை மற்றும் ஜனசவிபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க மற்றும் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM