நோயாளிகள் சிகிச்சைகளை பெறும் நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார துணை அமைச்சர் ஆய்வு விஐயம்!

05 Jan, 2026 | 03:40 PM
image

சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி சமீபத்தில் களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு விசேட ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 

சுகாதார அமைச்சினால் ஆரமபிக்கப்பட்ட  விசேட திட்டத்தின் கீழ், வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதன் மூலம், அரசாங்க வைத்தியசாலைகளை உரிய முறையில் பராமரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, இந்த விசேட ஆய்வு விஜயத்தை சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி மேற்கொண்டார். 

இங்கு, வைத்தியசாலையின் வார்டுகள், வைத்தியசாலை வளாகங்கள், வெளிநோயாளர் பிரிவு, ஆய்வகம், அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றை துணை அமைச்சர் ஆய்வு செய்தார், மேலும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்த மக்களுடன் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்து கலந்துரையாடினார்.

ஆய்வுக்குப் பிறகு, வைத்தியசாலை நிர்வாகத்துடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்ட துணை அமைச்சர் சுகாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

அங்கு காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்தார். 

வைத்தியசாலையை படிப்படியாக டிஜிட்டல் மயமாக்குவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது, இதன் மூலம் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் நோயாளிகள் சுகாதார சேவைகளைப் பெறவும், தேவையான மருத்துவ பரிசோதனைகளை உடனடியாகவும் வழங்கவும் இந்த விஐயம் பயனுள்ளதாக அமைந்நது.

களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலை 1960 இல் நிறுவப்பட்டது மற்றும் 1995 இல் ஒரு போதனா வைத்தியசாலையாக மேம்படுத்தப்பட்டது. தற்போது, வைத்தியசாலையில் 1281 படுக்கை வசதிகள் உள்ளன, மேலும் 2956 ஊழியர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையைத் தவிர, கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சை வழங்கும் முக்கிய வைத்தியசாலையாக இந்த மருத்துவமனை உள்ளது. 

களுபோவில போதனா வைத்தியசாலையின் இயக்குநர் டாக்டர் சாகரிகா கிரிவந்தேனியா, துணை இயக்குநர்கள் டாக்டர் லலித் பொத்தலகொட, டாக்டர் மனோஜ் ஜெயக்கொடி, டாக்டர் சாய் நிரஞ்சன், நிர்வாக அதிகாரிகள், விசேட மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து சுகாதாரத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்கள்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க சென்னை...

2026-05-16 17:20:15
news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23