நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. நாம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதி வழங்கியுள்ளனர். ஆகவே இது மலையக மக்களுக்கு பெரும் பக்க பலமாகும். அத்துடன் இது ஜனநாயகத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்தது.
இப்பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. . ஆனால் குறித்த பிரச்சினையை தீர்க்க எந்த அரசாங்கமும் முன்வரவில்லை. அரசாங்கங்களின் மீது குறை கூறுவதில் அர்த்தமில்லை. அப்போது இருந்த அமைச்சர்களுக்கே இது குறித்து செயலாற்ற முடியாது போனது என்றும் அக்கட்சி சாடியது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதன்போது முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், உப தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், உப தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், அரவிந்த குமார் மற்றும் பியசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிடுகையில்,
நாளை ( இன்று வியாழக்கிழமை) உள்ளூராட்சி மன்ற திருத்ததச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றபடவுள்ளது. இதன்போது எமது திருத்தங்களை நாம் முன்வைக்கவுள்ளோம்.
இந்நிலையில் பாராளுமன்றம் ,மாகாண சபை மற்றும் பிரதேச சபைகள் நாட்டில் உள்ளன. இது ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் நிறுவனங்களாகும். இவற்றில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அமைப்புக்களாக உள்ளூராட்சி மன்றங்களைக் குறிப்பிடலாம். இதன் மூலமாகவே கிராம மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுகின்றன.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 5 பிரதேச சபைகள் உள்ளன. மாநகர சபை அடங்களான மொத்தம் 8 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. எனினும் நாட்டில் 10 ஆயிரம் அல்லது8 ஆயிரம் பேர் கொண்ட பிரிவுகள் பிரதேச சபைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் 2 இலட்சத்துக்கும் அதிகமான சனத்தொகை உள்ள அம்பகமுவ மற்றும் நுவரெலியா ஆகியவற்றுக்கு தலா ஒரு உள்ளூராட்சி மன்றங்களே உள்ளன. இது போதாது. இதனை கொண்டு உரிய அபிவிருத்தியை மலையக மக்களிடம் கொண்டு செல்ல முடியாது. எனவே இது தொடர்பாக ஜனாதிபதி , பிரதமரிடம் எடுத்துரைத்தோம்.
இதன்படி ஜனாதிபதியும் பிரதமரும் பிரச்சினையை ஏற்றுக்கொண்டு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் இதற்கான ஆலோசனையை இருவரும் வழங்கியுள்ளனர். ஆகவே மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புரிந்து கொண்டுள்ளன. ஆகவே நுவரெலிய மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்க வேண்டும் என்ற எமது கோரிக்கைகக்கு வெற்றி கிட்டியுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிக்க அமைச்சர் பைசர் முஸ்தபா இணங்கியுள்ளார். எனவே உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரிப்பானது மலையக மக்களுக்கு பெரும் பலமாகும். அத்துடன் இது ஜனநாயகத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சிக்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளது.
எனினும் இப்பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் குறித்த பிரச்சினையை தீர்க்க எந்த அரசாங்கமும் முன்வரவில்லை. அரசாங்கங்களின் மீது குறை கூறுவதில் அர்த்தமில்லை. அப்போது இருந்த அமைச்சர்களுக்கே இது குறித்து செயலாற்ற முடியாது போனது. இது தொடர்பாக போதிய தெளிவும் அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே நாம் தனிநாடு கோரவில்லை. எமக்கான உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிக்கவே கோரினோம். அதற்கு உரிய பதில் கிடைத்துள்ளது. இது எமக்கு போதுமானது. சந்தோஷம் என்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளமை மலையக மக்களுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் திகாம்பரம் சுட்டிக்காட்டினார்.
வி. இராதாகிருஷ்ணன்
இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்கு அமைச்சர் இராதா கிருஷ்ணன்,
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரிப்பின் காரணமாக மலையக மக்களுக்கு உரித்தான அபிவிருத்தி திட்டங்களை எம்மால் மேலும் அதிகரித்து கொள்ள முடியும். அத்துடன் அதிகளவிலான நிதியை ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும். எனவே அபிவிருத்திக்கான மலைய மக்களின் பங்கு மேலும் அதிகரிக்கும். உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எனக்கு பூரண அனுபவம் உள்ளது. ஆகவே மலையக மக்களின் பிரதான பிரச்சினை ஒன்றை தீர்த்தமைக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான ஆதரவினை தொடர்ந்து வழங்குவோம் என்றார்.
அரவிந்த குமார்
செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் ,
பதுளை மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் ஒரே அளவிலான சனத்தொகையும் நிலப்பரப்புமே உள்ளன. எனினும் பதுளையில் சிங்கள மக்கள் அதிகமாக உள்ளனர். அதுவே இரு இடங்களிலுமுள்ள வித்தியாசமாகும். . எனினும் பதுளையில் 10 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. நுவரெலியாவில் 8 மன்றங்களே உள்ளன. எனவே இதுவே வித்தியாசம். ஆகவே நுவரெலிய வாழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றார்.
பியசேன
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பியசேன ,
நுவரெலிய மக்களின் வாக்குகளை பெற்றவன் என்ற வகையில் இது மலையக மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.இதன் மூலம் இனங்களுக்கிடையில் மேலும் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்றார்.
அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் சந்திப்பு
இதேவேளை நுரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் நேற்று காலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை அதிகரிப்பதற்கான முன்னணியின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதி வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM