லயன் மனோ பவுண்டேசனினால் (Lion Mano Foundation) கொட்டாஞ்சேனையிலுள்ள பரமானந்த விகாரையில் கடந்த மாதம் புதன்கிழமை (31) 60 பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை புத்தகப் பை, அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் ஆகியன இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
லயன் மனோ பவுண்டேசனின் ஸ்தாபகர் சிதம்பரம் மனோகரனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்களுக்கான பொருட்களை வழங்குவதற்கு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த தசநாயக்க, சிவானந்தன் ஆகியோர் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர்.
எதிர்காலத்தில் மேலும் பல உதவிகளை லயன் மனோ பவுண்டேசனினால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கொழும்பில் வசிக்கும் வசதி குறைந்த 60 மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஸ்தாபகரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சிதம்பரம் மனோகரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பாடசாலை பொருட்களுக்கு நிதியுதவிகளை வழங்கிய தசநாயக்க, சிவானந்தன் மற்றும் கொட்டாஞ்சேனையிலுள்ள பரமானந்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட சகல இன மாணவர்களும் கலந்துகொண்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM