2026 ஆம் ஆண்டில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் இரண்டாவது முறையாக முயற்சிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன.
இளம் வயதினர் கல்வி கற்கும் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு ஏற்கனவே கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எப்போதும் கட்டாயமாக்கப்படவில்லை.
2023 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கம் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு டிஜிட்டல் பயன்பாடு வயது தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தது. இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஆதரவுடன் சட்ட வரைபு ஒன்றை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
இது டிஜிட்டல் திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் இளைஞர்களுக்கு ஏற்படும் அபாயங்களைக் காட்டும் ஏராளமான ஆய்வுகளை மேற்கோள் காட்டுகிறது.
ஜனவரி மாதம் ஆரம்பத்தில் சட்டத்தை சட்ட ஆய்வுக்கு சமர்ப்பிக்கலாம் என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்த தடை செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் நடைமுறைக்கு வரலாம் என ஏப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
தடையற்ற ஒன்லைன் அணுகல் சிறுவர்களை "பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு" வெளிப்படுத்துவதாகவும், சிறுவர்களும் சைபர்புல்லிங் மற்றும் பிற தீங்குகளுக்கு இலக்காகலாம் என்பதைக் குறிப்பிடுகிறது.
முன்மொழியப்பட்ட சட்டம் சமூக ஊடக தளங்கள் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தங்கள் சேவைகளை வழங்குவதை சட்டவிரோதமாக்கும், மேலும் மொபைல் போன் பயன்பாட்டின் மீதான தடையை உயர்தர பாடசாலைகளுக்கும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM