கொழும்பு 13, 69A ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள ஆதி ஸ்ரீ ஐயப்ப சேத்திரத்தின் 50வது ஆண்டு பொன்விழா, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கத்தினரின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை முதலாம் திகதி (17.11.2025) முதல் 03.01.2026 வரை தீர்த்த யாத்திரை மேற்கொள்ள ஐயப்பன் அருள் பாலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 03.01.2026 அன்று மாலை, இந்தியாவிலிருந்து புதிதாக தருவிக்கப்பட்ட 6 அடி 1 அங்குலம் 4 இஞ்ச் உயரமுள்ள கருப்பண்ண சுவாமி திருவுருவத்திற்கு விசேட பூஜை வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த பூஜை, ஆலய அறங்காவலர்களான பிரதம குருசாமி பொன். ரவீந்திரகுமரன் தலைமையிலும், பிரதித் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் குருசாமி, செயலாளர் ஆ. சந்திரதாஸ் குருசாமி ஆகியோரின் வழிநடத்தலிலும், இராசையா குருசாமி, மகேந்திரன் குருசாமி, ரவீந்திரன் குருசாமி, சந்திரசேகரன் குருசாமி உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன், ஜெயந்திநகர் ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விசேட பூஜையில் பக்தர்கள் மற்றும் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஐயப்பனின் அருளாசியைப் பெற்றிடுமாறு, ஆலயத்தின் ஊடகச் செயலாளர் பொன். பத்மநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM