பஹ்ரைன் இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் “இலங்கை தயாராக உள்ளது” (Sri Lanka Is Ready) எனும் தொனிப்பொருளில் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியது.
இந்த நிகழ்வு சீப் பகுதியில் உள்ள கிராண்ட் சுவிஸ்-பெல் ஹோட்டலில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பஹ்ரைனின் சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை வெளிப்படுத்தும் முகமாக பாரம்பரிய கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இலங்கையின் கலாசார பாரம்பரியம், கடற்கரைகள், வனவிலங்குகள், சுற்றுலா, ஆரோக்கியம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற தனித்துவமான அம்சங்கள் தொடர்பில் இந்த நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் ஊடாக பஹ்ரைன் இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு வெளிப்படுத்தப்பட்டது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM