கொழும்பு ஆராய்ச்சி மற்றும் உளவியல் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இலங்கை சர்வதேச பயன்பாட்டு உளவியல் மாநாடு இந்த வாரம் கொழும்பில் ஆரம்பமாகின்றது. உலகப் புகழ்பெற்ற உளவியலாளரும் நேர்மறை உளவியலின் தந்தையுமான பேராசிரியர் மார்டின் செலிங்மன் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றார்.
ஐ-கெப் இலங்கை - 2017 சர்வதேச பயன்பாட்டு உளவியல் மாநாடு இந்த வாரம் கொழும்பில் ஆரம்பிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த மாநாடானது 26,27,28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் சிறப்பு அதிதியாக உலகப் புகழ்பெற்ற உளவியலாளரும் நேர்மறை உளவியலின் தந்தையுமான பேராசிரியர் மார்டின் செலிங்மன் மாநாட்டில் கலந்துகொள்கின்றார்.
அத்துடன் சர்வதேச நாடுகளின் உளவியல் சார் பேராசிரியர்கள், தத்துவ ஞானிகள், விசேட வைத்தியர்கள் மற்றும் சுகாதார அமைச்சிலிருந்து அதிகாரிகள், உளவியலாளர்கள், உளவியல் தொழில்சார் நபர்கள், சமூக உளவியலாளர்கள், அரசு தொடர்புடைய பிரதிநிதிகள், தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகப் புகழ்பெற்ற உளவியலாளரும் நேர்மறை உளவியலின் தந்தையுமான பேராசிரியர் மார்டின் செலிங்மன் மாநாட்டில் 1964 ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1967 ஆம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி கற்கையை முடித்தார். 1998 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க உளவியலாளர் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவர் 250ற்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் உண்மையான மகிழ்ச்சி, அசாதாரண உளவியல், ஆர்ப்டிமிஸ்டிக் குழந்தைகள் போன்ற தலைப்புகளில் 20 க்கும் மேற்பட்ட சுய உதவி புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவருடைய நூல்கள் பதினொரு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, அமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவர் குறிப்பிட்ட சில காலமாக அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் இராணுவ வீரர்களிடையே உளவியல் ரீதியான மீள்வரவை உருவாக்கு வதற்கான கடமையினை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM