நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று (28) இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்கிராவ - தலாவ வீதியில் கிரலோகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலாவயிலிருந்து எப்பாவல நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிர் திசையில் வந்த லொரியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, காரில் பயணித்த ஓட்டுநர், ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் காயமடைந்து தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் மெல்சிரிபுர பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை - தங்காலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறையிலிருந்து கந்தர நோக்கிச் சென்ற வேன் ஒன்று கடற்கரை வீதியில் வலதுபுறம் திரும்பவிருந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேனின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் மாத்தறை, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM