நாவலப்பிட்டி, குயின்ஸ்பெரி பகுதியில் அமைந்துள்ள அருள் மிகு ஸ்ரீ தேவசேனாதிபதி திருக்கோவில் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தும் நவநாத சித்தர் சிவாலய திருவாதிரை ஆருத்ரா தரிசனம் இந்த ஆண்டு 2026 ஜனவரி 03 ஆம் திகதி (சனிக்கிழமை) பக்தி பூர்வமாக நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னோட்ட நிகழ்வுகள் 2026 ஜனவரி 02 ஆம் திகதி மாலை ஆரம்பமாகின்றன. அன்றிரவு 12.00 மணிமுதல் சித்தர் வனத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துவரும் நிகழ்வு நடைபெறும்.
தொடர்ந்து முருகப்பெருமான் மற்றும் நவநாத சித்தர் மூர்த்திகளுக்கு ஸ்நபன அபிஷேகம், பஜனை வழிபாடுகள், திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தீபாராதனை, திருவருட் பிரசாதம் வழங்கல், மகேஸ்வர பூஜை
பக்தர்களுக்காக அன்னதானம்
2026 ஜனவரி 03 – பௌர்ணமி தினமான சனிக்கிழமை நண்பகல் வேளையில் மீண்டும் மகேஸ்வர பூஜை நடைபெற்று, தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
இந்த புனித திருவிழாவை ஆலய பரிபாலன சபையினர், பொதுமக்கள் மற்றும் உபகாரர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அனைத்து பக்தர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
நாவலப்பிட்டி ஹேமாந்த்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM