சுகாதார சேவைகள் நிறுவனங்களில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 23 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் அதன் பின்னர் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அப்போதிருந்த பாரியளவிலான கருத்திட்டங்களை மீண்டும் மூலோபாயப்படுத்தல் மற்றும் துரிதப்படுத்தல் (RAMP) குழுவின் விதந்துரைக்கமைய சுகாதார சேவைகள் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிர்மாணக் கருத்திட்டங்கள் பல இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
தற்போது நிலவுகின்ற சுகாதார சேவைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிகரித்து வரும் சுகாதார சேவைகளுக்கான கேள்வியைக் கருத்தில் கொண்டு, பல்வேறு படிமுறைகளில் காணப்படுகின்ற அக்கருத்திட்டங்களை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது வேலைகள் பூர்த்தி செய்யப்படாமலுள்ள கீழ்வரும் 08 சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களுக்கான மொத்தச் செலவு மதிப்பீடு மற்றும் கால அட்டவணையைத் திருத்தம் செய்து, அவற்றின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது :













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM