( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நத்தார் தாத்தாவை போன்று நிவாரண வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கினீர்கள். அதனை தற்போது மறந்து விட்டீர்கள். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்கள். அவற்றை முறையாக செயற்படுத்துங்கள் இல்லையேல் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அனர்த்தத்தால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை புனரமைக்க 250 பில்லியன் ரூபா இந்த குறைநிரப்பு பிரேரணையில் ஒதுக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான தெரிவுக்குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது வீதி அதிகார சபைக்கு வீதிகளை புனரமைப்பதற்கு மாத்திரம் 190 பில்லியன் ரூபா தேவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
புகையிரத திணைக்களத்தின் நட்டம் இன்றளவில் மதிப்பிடப்படவில்லை. இலங்கை மின்சார சபை 20 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் குறைநிரப்பு பிரேரணையில் அது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. 100 மில்லியன் டொலர் கடன் பெற எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு கடன் பெற்றால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நத்தார் தாத்தாவை போன்று நிவாரண வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கினீர்கள்.அதனை தற்போது மறந்து விட்டீர்கள். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்கள். அவற்றை முறையாக செயற்படுத்துங்கள் இல்லையேல் விளைவு பாரதூரமானதாக அமையும்.
கொழும்பு மாவட்டத்தில் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெருமளவிலானோருக்கு முழுமையாக நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை. கொழும்பில் தேங்கியுள்ள குப்பைகள் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. இந்த அனர்த்த நிலைமையின் போது அரசாங்கம் தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டது. தற்போதும் அவ்வாறே செயற்படுகிறது. எவரது ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.இந்த நிதி வழங்கலிலும் பல முறைகேடுகள் காணப்படுகின்றன. இந்த கொடுப்பனவை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குங்கள்.இந்நடவடிக்கையை இவ்வாரத்துக்குள் நிறைவு செய்யுங்கள் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM