களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் நால்வரும் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர் களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் வைத்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த செவ்வாய்க்கிழமை (16) கைதுசெய்யப்பட்டனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் உபுல்வெஹெர பிரதேசத்தில் வசிக்கும் 27 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கைதான சந்தேக நபர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு பேர் 16ஆம் திகதி இரவு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நேற்று (17) கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தலா 80 ஆயிரம் ரூபாய் வீதம் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM