இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஆகியவர்களைப் போன்று போலி அடையாள அட்டைகளை தயாரித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (16) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், சந்தேக நபரிடம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள நபரொருவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர் கடந்த 03 ஆம் திகதி பாணந்துறை நகரத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் வைத்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM