செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விளையாட்டுத் திருவிழா 2025 (ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்ஸ) அண்மையில் டொரிங்டன் மைதானத்தில் வண்ணமயமான காட்சிகளும் போட்டியுணர்வும் நிரம்பிய விழாவாக நடைபெற்றது.
இவ்வாண்டில் நிறுவனத்தின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாகக் கருதப்படும் இந்த நிகழ்வில், அனைத்து முக்கிய விற்பனைப்பிரிவுகளிலும் தலைமையகத்திலும் சிரேஷ்ட முகாமைத் துவப்பிரிவிலும் இருந்தும் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டின் விழாவானது, செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கும் நலத்திற்குமான அர்ப்பணிப்பை மட்டுமின்றி, 20 முதல் 65 வயது வரையிலான பல தலைமுறை சக ஊழியர்களை ஒன்றிணைத்ததாக அமைந்திருந்தது.
சுருக்கமாக கூறினால் இது அனைவரையும் இணைத்துக் கொள்ளும் பண்பையும், ஒன்றுபட்ட பணியிட கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
100 மீட்டர் ஓட்டத்திலிருந்து 1,500 மீட்டர் ஓட்டம் வரை, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோல்பந்தெறிதல், வட்டெறிதல் போன்ற முழுமையான தடகள போட்டிகள் டொரிங்டன் மைதானத்தை முழுவதும் உற்சாகத்தால் குலுங்கச் செய்தன.
நடைப் போட்டியும் உற்சாகமான கயிறு இழுத்தலும் நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரஸ்யத்தை சேர்த்தன. இந்த ஆண்டின் விழா, செப்டம்பரில் நடைபெற்ற குழு விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. அந்த போட்டிகளில் கிரிக்கெட், பூப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் இடம்பெற்றுன.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விளையாட்டுக்கழக தலைவர் சமத் அல்விஸ் கூறுகையில், இந்த விளையாட்டு விழா நிறுவனத்தில் நேர்மறையான பணியிட கலாசாரத்தை ஊக்குவிப்பதோடு, அதன் ஊழியர்களையும் முகவர் படையையும் ஆதரிக்கும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
'செலிங்கோ லைஃப் நிறுவனத்தில்,எமது ஊழியர்களிடையே ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவது எமது நோக்கத்திற்கு அடிப்படையானது என்று நாம் நம்புகிறோம். விளையாட்டு விழா என்பது நாம் ஒன்றிணைந்து, சாதனைகளைக் கொண்டாடவும், சிறந்து விளங்குவதற்கும் ஊழியர் ஈடுபாட்டிற்கும் எமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும் ஒரு அற்புதமான வாய்ப்பாகும்,' என்று கூறினார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM