அநுராதபுரத்தின் மிஹிந்தலை - சீப்புகுளம், அம்பகஹவெல பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இடது காலில் காயமடைந்த நிலையில் அநுராதபுரத்தின் மிஹிந்தலை பகுதியில் சுற்றித் திரிந்த போது, கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை பந்துலகம வனவிலங்கு கால்நடை அலுவலகத்தால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பின்னர், ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறித்த யானையை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறித்த யானை சமீபத்தில் சீப்பு குளம் பகுதிக்கு சென்றுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் காட்டு யானை மீது தீ வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் காட்டு யானையை தேடி கண்டுபிடித்து பந்துலகம கால்நடை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் உதேஷிகா மதுவந்தி மற்றும் கால்நடை ஊழியர்கள் உள்ளிட்டவர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை (16) காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மேலும் காட்டு யானை மீது தீ வைத்த நபர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM