ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பயணத் தடையை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சிரியா மற்றும் பாலஸ்தீன உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கொண்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் உட்பட, நாட்டிற்குள் உள் நுழைய பயண தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் ஆறு நாடுகளைச் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி, ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, ஈக்குவடோரில் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளின் குடிமக்களுக்கு ஏற்கனவே இருந்த முழுமையான பயணத் தடைகள் தொடர்கின்றன.
அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் நைஜர், தென் சூடான், புர்கினா பாசோ, மாலி, மற்றும் சிரியா ஆகிய ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கும் முழுமையான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பாலஸ்தீன உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கொண்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
முன்னதாக பகுதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்த லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இப்போது முழுமையான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏழு நாடுகளில் இருந்து நான்கு நாடுகளுக்கு ஏற்கனவே இருந்த பகுதி கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
துர்க்மெனிஸ்தான் நாடு அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பதால், அந்நாட்டின் குடிமக்களுக்கான இ-விசா தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும், 15 நாடுகளுக்கு பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பில், சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இராஜதந்திரிகள் போன்ற சில வகை விசா வைத்திருப்பவர்கள், மற்றும் அமெரிக்க தேசிய நலன்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் நபர்களுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
முழு பயணத் தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகள் பின்வருமாறு:
• சிரியா
• ஆப்கானிஸ்தான்
• மியன்மார்
• சாட்
• கொங்கோ குடியரசு
• பாலஸ்தீன ஆணையத்தால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள்
மேலதிகமாக பகுதியளவில் பயண கட்டுப்பாடுகள் மற்றும் விசா கட்டுப்பாடுகள் 15 பிற நாடுகளின் குடிமக்களுக்குப் பொருந்தும்
• நைஜீரியா
• அங்கோலா
• சாம்பியா
• கெமரூன்
• எத்தியோப்பியா
• கானா
• ஐவரி கோஸ்ட்
• செனகல்
• தான்சானியா
• உகாண்டா
• சிம்பாப்வே
• எரித்திரியா
• சூடான்
• சியரா லியோன்
• காம்பியா











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM