ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் எழுதி வெளியிட்ட நஞ்சாகும் நிலம் நூல் சிறந்த சூழலியல் நூலுக்கான வடக்கு மாகாணத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல் மிக மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டு வரும் நாம் சூழல் தொடர்பான எச்சரிகையினை விடுக்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை வலியுறுத்தும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது.

வருடந்தோறும் இடம்பெறுகின்ற வடக்கு பண்பாட்டு பெரு விழாவில் பல்வேறு துறைகளில் நூல்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் கவிதை ,சிறுகதை, ஆய்வு, சூழலியல், என பலதுறைகளில் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த நூல்களில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு வருது வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது.
பண்பாட்டுப் பெருவிழாவும், பாரம்பரியக் கண்காட்சியும் செவ்வாய்க்கிழமை (16.12.2025) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவுத்துறைப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் ஆளுநருடன் பிரதம விருந்தினர்களாகப் பங்கேற்றனர். மேலும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், பெருந்திரளான கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM