(நெவில் அன்தனி)
அதிக தொகைக்க விலைபோனவர் கெமரன் கிறீன் இண்டியன் பிறீமியர் லீக் 2026க்கான வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முகாமைத்துவம் ஆதிக்கம் செலுத்தி, அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கெமரன் கிரீனை 25.20 கோடி இந்திய ரூபாவுக்கு எடுத்தது.
ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகப் பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் கெமரன் கிறீன் ஆவார்.
அத்துடன் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரணவை 18 கோடி இந்திய ரூபாவுக்கு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் வாங்கியது.
புது டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் இலங்கை ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவை 4 கோடி இந்திய ரூபாவுக்கு டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியினரும் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கவை 2 கோடி இந்திய ரூபாவுக்கு லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியினரும் எடுத்தனர்.


ஏலத்தில் கிறீன் வாங்கப்பட்டதன் மூலம், அவர் மிச்செல் ஸ்டார்க்கின் 24.75 கோடி இந்தியா ரூபா விலையை முறியடித்து ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரரானார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் இடையேயான கடுமையான ஏலப் போட்டியைத் தொடர்ந்து அவரை கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
இந்திய அணியில் இடம்பெறாத திறமைசாலிகளும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தின் 20 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரசாந்த் வீர் மற்றும் ராஜஸ்தானின் 19 வயதான விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் கார்த்திக் ஷர்மா ஆகிய இருவரையும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தலா 14.20 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலம் எடுத்தது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM