(நெவில் அன்தனி)
துபாய், தி செவன்ஸ் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண ஏ குழு போட்டியில் மலேசியாவை துவம்சம் செய்து 315 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இந்தியா, தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது.
அபிக்யான் அபிஷேக் குண்டு குவித்த ஆட்டம் இழக்காத இரட்டைச் சதம், வேதாந்த் த்ரிவேதி பெற்ற அரைச் சதம், தீப்பேஷ் தேவேந்திரன் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது.
அபிக்யான் அபிஷேக் குண்டு ஆட்டம் இழக்காமல் 208 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 90 ஓட்டங்களையும் வைபவ் சூரியவன்ஷி 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் முஹம்மத் அக்ரம் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
409 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 32.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மத்திய வரிசையில் ஹம்ஸா பங்கி 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்துவீச்சில் தீப்பேஷ் தேவேந்த்ரன் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் உதாவ் மோகன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: அபிக்யான் அபிஷேக் குண்டு











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM