"புலிகள் தலைவர் பிர­பா­க­ர­னுடன் அதிக நேரத்தை செல­வி­ட­மு­டி­யாது போனமை குறித்து வருந்­து­கிறேன்" : அவ­ரது மகனைக் படை­யி­னரே கொன்­றி­ருப்பர்

Published By: Robert

20 Aug, 2017 | 10:19 AM
image

"பிர­பா­க­ரனை தமிழ் மக்கள் ஏன் மகத்­தான ஒரு தலை­வ­ராக  விரும்­பி­னார்கள் என்று என்னால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை.  பிர­பா­க­ரனை முதல்­த­டை­வை­யாக சந்­திப்­ப­தற்கு நான் சென்­றி­ருந்­த­போது இலங்­கையில் யாருமே அதனை அறிந்­தி­ருக்­க­வில்லை. புலி­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் செல்ல இலங்­கையின் அப்­போ­தைய ஜனா­தி­பதி அனு­மதி அளித்­தி­ருந்தார். இது பிர­த­ம­ருக்குக் கூடத் தெரி­யாது.

 நாங்கள் விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பிர­தே­சத்தில் பிர­பா­க­ரனை சந்­தித்தோம்.அதற்­காக நாங்கள் உலங்கு வானூர்­தியில் சென்­றி­ருந்தோம்.   தாழ்­வா­கவும் மேலு­யர்ந்தும் பறந்து சென்­றது அது. மலை­க­ளாக இருந்­தி­ருந்தால் பயங்­க­ர­மாக இருந்­தி­ருக்கும். நாங்கள் செல்­வதை இரா­ணு­வத்­தி­னரோ விடு­தலைப் புலி­களோ அறிந்­தி­ருக்­க­வில்லை. 

அங்கு நாங்கள் பிர­பா­க­ரனை சந்­தித்தோம்.அது ஒரு நல்ல சந்­திப்பு. அமைதி முயற்­சி­களில் அவர்கள் ஆர்வம் கொண்­டி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­தினர். ஆனால் தமி­ழர்கள் மத்­தியில் பிர­பா­கரன் மகத்­தான நிலையில் இருக்­கிறார் என்­பதைப் புரிந்து கொள்­வது கடி­ன­மாக இருந்­தது.

அந்த நேரத்தில் அவர் கட­வு­ளாக மீட்­ப­ராக போற்­றப்­பட்டார்.தமிழ் மக்கள் ஏன் அவரை அப்­படி போற்­றி­னார்கள் என்று எம்மால் உண்­மையில் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை"

இவ்­வாறு இலங்­கைக்­கான நோர்­வேயின் முன்னாள் சமா­தான தூது­வரும் ஐ.நா.சுற்­றுச்­சூழல் திட்டப் பணிப்­பா­ள­ரு­மான  எரிக் சொல்ஹெய்ம் சர்­வ­தேச தொலைக்­காட்சி சேவை ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில், 

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் அதிக நேரத்தை செல­வி­ட­மு­டி­யாமல் போன­தற்­காக வருந்­து­கின்றேன் என்றார்.

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னுடன் கொண்­டி­ருந்த உறவு நட்பு ரீதி­யா­னதா அல்­லது அத­னை­வி­டவும் அதி­க­மா­னதா என்று எழுப்­பிய கேள்­விக்குப் பதில் அளித்­துள்ள எரிக் சொல்ஹெய்ம்

“உல­கி­லுள்ள வேறெந்த வெளி­நாட்­ட­வ­ரையும் விட பிர­பா­க­ரனை நான் அதி­க­மாக அடிக்­கடி சந்­தித்­தி­ருக்­கிறேன். அவர் தமிழ் மக்­களை  பொது­வாக சந்­திப்­பது வழக்கம். இலங்­கையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் குழுவை ஒரு­முறை சந்­தித்­தி­ருக்­கிறார். சில சிங்­க­ள­வர்­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கிறார். ஆனால் அவர் தமிழ் மக்­களை எப்­போதும் சந்­தித்து வந்தார். அவ­ருடன் இன்னும் கூடு­த­லான நேரத்தை செல­விட்­டி­ருந்தால் நாம் பெரும்­பாலும் அவர் மீது இன்னும் செல்­வாக்கு செலுத்­தி­யி­ருக்க முடியும். 

பிரச்­சி­னைகள் பற்றி பேசு­வதன் மூலம் அவ­ருடன் தனிப்­பட்ட உறவை ஏற்­ப­டுத்த நாங்கள் முயன்றோம்.  அவர் உண்­மையில் அது­பற்றி அக்­கறை கொண்­டி­ருந்தார்.

அவர் நிச்­சயம் திரைப்­ப­டங்­களில் ஆர்வம் கொண்­டி­ருந்தார்.உணவு விட­யத்தில் அவர் ஒரு நல்ல சமை­யல்­கா­ர­ராக அறி­யப்­பட்டார்.இயற்கை மீது ஆர்வம் கொண்­டி­ருந்தார்.

ஆனாலும் தனிப்­பட்ட உறவை வளர்ப்­பது கடி­ன­மாக இருந்­தது.ஏனென்றால் எமக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நேரமே இருந்­தது.மேலும் இலங்கை அர­சாங்­கத்­தினால் வடக்­கிற்குச் செல்­வ­தற்கும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

அதை­விட மொழித் தடையும் இருந்­தது.அவர் தமிழில் பேசு­வதை புரிந்­து­கொள்ள எமக்கு மொழி­பெ­யர்ப்­பாளர் தேவைப்­பட்டார். இறு­தி­யாக அவர் வெளிப்­ப­டை­யாக திறந்­த­நி­லையில் இல்­லாத பாத்­தி­ர­வ­கை­யா­கவே இருந்தார்.

கவர்ச்­சி­க­ர­மா­ன­வ­ராக ஆனால் இன்னும் அதிகம் மூடிய எச்­ச­ரிக்­கை­யுடன் அவர் இருந்தார் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் மகன் பாலச்­சந்­திரன் படை­யி­னரால் கைது­செய்­யப்­பட்ட நிலையில் படு­கொலை செய்­யப்­பட்டார் என தான் வலு­வாக சந்­தே­கிப்­ப­தாக தெரி­வித்த எரிக் சொல்ஹெய்ம்  பிர­பா­கரன் எவ்­வாறு கொலை செய்­யப்­பட்டார்  என்­பது எனக்கு தெரி­யாது.  பிர­பா­க­ரனின் 12வயது மகன் இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பின்னர் அவர்­களால் படு­கொலை செய்­யப்­பட்டார் என்றே நாங்கள் மிக­மிக வலு­வாக சந்­தே­கிக்­கிறோம்.

இது முற்­றிலும் மிக மோச­மான பொறுப்­பற்ற தீய செயல். இந்த விட­யத்தில் இலங்கைப் படை­யினர் மிக­மிக நன்­றாக செயற்­ப­டா­தமை துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது எனவும் அவர் கூறினார்.

வெள்ளைக் கொடி விவ­காரம் குறித்து அவ­ரிடம் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு எரிக் சொல்ஹெய்ம் பதி­ல­ளிக்­கையில்

போரின் இறு­திக்­கட்­டத்தில் 2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி விடு­த­லை­பு­லி­களின் சமா­தான செய­லக பணிப்­பாளர் புலித்­தே­வ­னிடம் இருந்து எனக்கு தொலை­பேசி அழைப்பு வந்­தது. ஆனால் நான் அவ­ருடன் நேர­டி­யாகப் பேச­வில்லை வேறு­ஒ­ரு­வரே அவ­ருடன் பேசினார்

அத்­துடன் இந்த உரை­யா­ட­லின்­போது தாம் வழங்­கிய வாய்ப்­புக்­களை உத­றி­விட்டு காலம் கடந்து உதவி கோரு­வ­தாக புலித்­தே­வ­னுக்கு பதி­ல­ளித்­த­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அது மே 17ஆம் திகதி. அது நோர்­வேயின் தேசிய நாளும் கூட.அதனால் நினைவில் வைத்­தி­ருக்­கிறேன். ஒஸ்­லோவில் அணி­வ­குப்­புக்­காக நான் சென்று கொண்­டி­ருந்தேன்.அப்­போது புலித்­தே­வ­னிடம் இருந்து அழைப்பு வந்­தது.

அவர் விடு­தலைப் புலி­களின் மிகச் சிறந்த உறுப்­பி­னர்­களில் ஒருவர். விடு­தலைப் புலி­களின் அர­சியல் பிரிவின் தலை­வ­ராக இருந்தார்.

இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் தாங்கள் சர­ண­டைய விரும்­பு­வ­தா­கவும் அதற்கு எம்மால் உதவ முடி­யுமா என்றும் அவர் எம்­மிடம் கேட்டார்.

நான் அவ­ருடன் நேர­டி­யாக பேச­வில்லை. ஆனால் நாங்கள் தலை­யீடு செய்­வ­தற்கு மிகவும் தாம­த­மா­கி­விட்­டது என்று நோர்­வே­ஜிய சகா ஒருவர் அவ­ருக்கு கூறினார்.ஏனென்றால் போர் முடிவுக் கட்­டத்தை நெருங்கி விட்­டது.

நாம் தலை­யீடு செய்­வ­தற்கு சாத்­தி­யங்கள் இருந்­த­போது போராட்­டத்தைக் கைவி­டு­வ­தற்கு முன்னர் நாங்கள் அவர்­க­ளுக்கு வாய்ப்­புக்­களை வழங்­கி­யி­ருந்தோம் என்­பதை நாம் அவர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டினோம். ஆனால் இப்­போது அது மிகவும் தாம­த­மாகி விட்­டது என்று கூறினோம்.

அத்­துடன் பெரி­ய­தொரு வெள்ைளக் ­கொ­டியை ஏந்திச் செல்­லுங்கள் ஒலி­பெ­ருக்­கிகள் மூலமோ வேறெந்த வழி­யிலோ உங்­களின் எண்­ணத்தை இலங்கை ஆயுதப் படை­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­துங்கள் என்­பதைத் தான் எம்மால் உங்­க­ளுக்கு கூற­மு­டியும்.

எமது பக்­கத்­தி­லி­ருந்து இலங்கைத் தலை­வர்­க­ளுக்கு சர­ண­டைய விரும்பும் உங்­களின் விருப்பம் தெரி­யப்­ப­டுத்­தப்­படும் என்று அவ­ரிடம் நாம் கூறினோம்.

அதன்­ப­டியே நிச்­ச­ய­மாக அதனை இலங்கைத் தலை­வர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தினோம். நாங்கள் அதனை ராஜபக் ஷவின் ஆலோ­ச­க­ரான பசில் ராஜபக் ஷவுக்குத் தெரி­யப்­ப­டுத்­தினோம்.

நாங்கள் மட்­டு­மல்ல முக்­கி­ய­மான சில தமி­ழர்கள் மூலமும் புலிகள் அதனைச் செய்­தனர். சில இந்­திய இடைத்­த­ர­கர்­களும் கூட இலங்கை தலை­மைக்கு தகவல் அனுப்­பி­னார்கள்  என்று நான் நினைக்­கிறேன்.

ஒருநாள் கழித்து நடே­சனும் புலித்­தே­வனும் கொல்­லப்­பட்­டு­விட்­ட­தாக எங்­க­ளுக்கு தகவல் கிடைத்­தது. அவர்­களின் மரணம் நடந்த சரியான சூழ்நிலைகள் தொடர்பாக இன்னமும் தெரியவில்லை.

அந்த நேரத்தில் அவர்கள் பிரபாகரனுடன் இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் சரியாக எனக்கு தெரியவில்லை. பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்று. 

எனினும் பிரபாகரனின் 12வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகமிக வலுவாக சந்தேகிக்கிறோம். இது முற்றிலும் மிக மோசமான பொறுப்பற்ற தீயசெயல்.

இந்தக் கொலைகள் தொடர்பாக பெரியதொரு கேள்விக்குறி உள்ளது.ஏன் அவர்கள் சரணடைதலை ஏற்றுக் கொள்ளவில்லை.  நீதிமன்றத்தில் நிறுத்தாமல் அவர்களை ஏன் கொன்றார்கள் என்று தெரியவில்லை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15