(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய மத்திய வரிசை வீரர் அபிக்யான் அபிஷேக் குண்டு ஆட்டம் இழக்காமல் 209 ஓட்டங்களைக் குவித்து, தனிநபருக்கான ஆசிய கிண்ண துடுப்பாட்ட சாதனையை சமப்படுத்தினார்.
கோலாலம்பூரில் 13 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் கத்தாருக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வீரர் சௌம்யா சர்க்கார் 209 ஓட்டங்களைக் குவித்து தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கை சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
அத்துடன் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையையும் சர்க்கார் நிலைநாட்டியிருந்தார்.
அவரது சாதனையையே 17 வயதுடைய அபிக்யான் அபிஷேக் குண்டு இன்று சமப்படுத்தினார்.
125 பந்துகளை எதிர்கொண்ட அபிக்யான் அபிஷேக் குண்டு 17 பவுண்டறிகளையும் 9 சிக்ஸ்களையும் குண்டுமாரி பொழிவதுபோல் விளாசித் தள்ளினார்.
அவரது இரட்டைச் சத உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது.
அத்தடன் அப் போட்டியில் அபிஷேக் குண்டு 3ஆவது விக்கெட்டில் வேதாந்த் த்ரிவேதியுடன் 212 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டார்.
தொடர்ந்து கனிஷ்க் சௌஹானுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 87 ஓட்டங்களை அபிஷேக் குண்டு பகிர்ந்தார்.
அதிரடிக்கு பெயர்பெற்ற இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி 50 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 90 ஓட்டங்களையும் பெற்றனர்.
இப் போட்டியில் இந்தியா குவித்த 408 ஓட்டங்களானது 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பதிவான இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
நான்கு தினங்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக இந்தியா 6 விக்கெட்களை இழந்து குவித்த 433 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
பந்துவீச்சில் மொஹம்மத் அக்ரம் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
409 ஓட்டங்கள் என்ற நினைத்துப்பார்க்க முடியாத இமாலய வெற்றி இலக்கை நோக்கி மலேசியா துடுப்பெடுத்தாடி வருகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM