(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் இலங்கையின் வளர்ந்து வரும் இளைய பரா வீரர்கள் மூவர் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி மூன்று தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்று சரித்திரம் படைத்தனர்.
17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான F40/41 வகைப் பிரிவில் பரா வீராங்கனை தில்மினி உதும்பரா குமாரகே இரண்டு தங்கப் பதக்கங்களையும் 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான T47 வகைப் பிரிவில் பங்குபற்றிய செனுவர சந்திலு ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான T42/T61–64 வகைப் பிரவில் இஷாம் யூனுஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.



17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான F40/41 வகைப் பிரிவினருக்கான தட்டெறிதல் போட்டியில் 12.4 மீற்றர் தூரத்தையும் குண்டெறிதல் போட்டியில் 3.69 மீற்றர் தூரத்தையும் பதிவு செய்து தில்மினி உதும்பரா குமாரகே இரண்டு தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார்.
17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான T47 வகைப் பிரிவில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.29 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்த செனுவர சந்திலு, நீளம் பாய்தலில் 4.96 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதேவேளை, இளம் குறுந்தூர ஓட்ட வீரரான இஷாம் யூனுஸ் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான T42/T61–64 வகைப் பிரவினருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம் 01.95 செக்கனில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

துபாயில் கடந்த 7ஆம் திகதிமுதல் 14ஆம் திகதிவரை நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் 35 ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றினர்.
இலங்கையிலிருந்து 9 மாற்றுத்திறனாளிகள் வெவ்வேறு வகைப் பிரிவுகளின் கீழ் தடகளம் (ஆண்கள் 4, பெண்கள் 1), மேசைப்பந்தாட்டம் (ஆண்கள் 2) மற்றும் பட்மின்டன் (ஆண்கள் 2) ஆகியவற்றில் போட்டியிட்டனர்.
இந்த ஒன்பது மாற்றுத்திறனாளிகளும் நேற்று நாடு திரும்பினர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM