சீதுவை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (15) காலை பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனமொன்றிலிருந்து தொலைபேசி கம்பிகளை வெட்டி 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள செப்பு கம்பிகளை அவர் கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 2130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் படுவத்தை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக 05 திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் அவரால் திருடப்பட்ட 12 மின் கேபிள்கள் மற்றும் 02 கிலோகிராம் 400 கிராம் உருகிய செப்பு கம்பி ஆகியவை விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சீதுவை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM