மொரட்டுவை - மாதங்கஹவத்த பகுதியில் தொலைக்காட்சிப் பெட்டியை கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், கடந்த 11ஆம் திகதி வீடொன்றில் 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவ கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை மேலும் விசாரணைக்கு உட்படுத்தியதில், 08 வீடுகளில் புகுந்து சொத்துக்களை கொள்ளையடித்த குற்றங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
இதன்போது, குற்றம் செய்ய சந்தேகநபர் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், மடிக்கணினிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்குலான, எகொட-உயன, மதகிஸ்ஸ வீதி மற்றும் ராவதாவத்த பகுதிகளில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்சந்தேக நபர் அங்குலான பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் எனவும், ஆண் சந்தேகநபர்கள்; 37, 38 மற்றும் 54 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மொரட்டுவை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM