வத்தளையில் 34 வயதுடைய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் (PNB) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இந்த போதைப்பொருட்களை கொள்வனவு செய்து, வேறொரு நபர் மூலம் நாட்டிற்கு கொண்டு வந்து தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டு வர பல்வேறு நபர்களைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 21 கோடியே 66 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் கையிருப்பு அடங்கிய பயணப்பை கடந்த 13 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்தல்காரரின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடத்தல்காரர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) பாங்கொக்கில் இருந்து பயணப்பை ஒன்றுடன் நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
தொடர்ச்சியான கண்காணிப்பைத் தொடர்ந்து, சந்தேகநபர் வீடு திரும்பிய பின்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்து, 20 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராம் 668 கிராம் 'குஷ்' கஞ்சாவை கைப்பற்றியதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இவை தவிர சந்தேகநபரிடமிருந்து 15 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா பெறுமதியான 4,900 அமெரிக்க டொலர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரும், அவர் வைத்திருந்த போதைப்பொருள் மற்றும் பணமும் இன்று திங்கட்கிழமை (15) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM