இந்தியாவின் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் சனிக்கிழமை (13) அறிவிக்கப்பட்டன.
இதில், மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4ல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி முதல் முறையாக, திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், “பத்தனம்திட்டா நகராட்சியில் LDF வெற்றி பெறவில்லை என்றால், எனது மீசையை எடுத்து விடுவேன்” என்று, LDF தொண்டரான பாபு வர்கீஸ் என்பவர் தேர்தலின்போது தனது நண்பர்களிடம் சவால் விடுத்திருந்தார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை (13) வெளியான நிலையில், LDF தோல்வி அடைந்தது.
இதனால் பாபு வர்கீஸ், தான் சொன்னது போலவே தனது மீசையை மழித்துக் கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM