வைத்தியசாலையின் பெயர்பலகையை மட்டும் மாற்றுவதால் மக்களுக்கான சேவை மேம்படாது - ஜனாதிபதி

14 Dec, 2025 | 11:59 AM
image

கடந்த சில மாதங்களாக மன்னார் பொது வைத்தியசாலையினை மத்திய அரசின்கீழ் கொண்டுசெல்ல சில வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுத்திருந்த நிலையில் சனிக்கிழமை (13) மன்னாரில் நடைபெற்ற விசேட மாவட்ட அபிவிருத்திக்கூட்டத்தின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்றைய கூட்டத்தின் போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையினை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இதற்கு சக பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்போது கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வடக்கு மாகாணசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளமையால் அதற்கு முன்பதாக வைத்தியசாலையை மத்திய அரசின்கீழ் கொண்டுவருமாறும், இல்லாதுவிட்டால் வடக்கு மாகாணசபை வந்துவிட்டால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சத்தியலிங்கம் அவர்களும் சேர்ந்து மத்திய அரசின்கீழ் கொண்டுவர விடமாட்டார்கள். அவர் இப்பொழுதே அதற்கு எதிர்ப்பாக உள்ளார் என தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் சிரித்தவாறே சத்தியலிங்கம் எம்.பியை நோக்கினர்.

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், வைத்தியசாலை மாகாணத்திற்கு சொந்தமானதா மத்திக்கு சொந்தமானதா என்பதுவல்ல விடயம், மன்னார் பொதுவைத்தியசாலையின் பிரதான பிரச்சினை வளப்பற்றாக்குறை. அதனை நிவர்த்தி செய்து தேவையான வளங்களை கொடுத்தால் வைத்தியசாலை திறம்பட இயங்கும். உதாரணமாக வைத்தியசாலையில் சி.ரி ஸ்கான் பிரிவிற்கான கட்டிடம் உள்ளது.

ஆனால் அங்கு சி.ரி ஸ்கான் இயந்திரம் இல்லை. இவ்விடயம் தொடர்பாக அன்மையில் பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சரை சந்தித்து சி.ரி ஸ்கேன் இயந்திரம் ஒன்றினை கோரியிருந்தேன். வரும் வருடத்திற்கான ஒதுக்கீட்டில் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு தேவைப்பாடுகள் நிறைய உள்ளது. அவற்றை பூரணப்படுத்தினாலே வைத்தியசாலை சிறப்பாக இயங்கும். ஆகவே அதனை செய்து தாருங்கள் என கோரினார்.

இதனையடுத்து பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் ஒரு வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கென நடைமுறைகள் உள்ளது. அதனை பூர்த்தி செய்தே அவ்வாறு செய்யமுடியும். அத்தோடு வெறுமனே பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் வைத்தியசாலை திறம்பட இயங்கிவிடப்போவதில்லை, தேவையான வளங்கள் பூரணப்படுத்தப்பட்டால் மாத்திரமே திறம்பட இயங்க முடியும்.

அந்தவகையில் வைத்தியசாலைக்கு தேவையான வளங்களை பூர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து குறித்த விடயத்திற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இந்த வைத்தியசாலை விடயம் தொடர்பாக இதற்கு முன் இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டமொன்றின்போது பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் பங்கேற்காத நிலையில் மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசின்கீழ் கொண்டுவரும் தீர்மானத்தினை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்கள், வடக்கு மாகாண சபையின் 2015/01 ம் இலக்க சுகாதார நியதிச்சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் மாகாணசபையின் நிறுவனங்களாக வர்த்தமானியூடாக பிரகடனப்பட்டுள்ளது என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20