(நெவில் அன்தனி)
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரும் ஆர்ஜன்டீனாவை FIFA 2022 கால்பந்தாட்ட உலக சம்பியனாக்கிய அணித் தலைவருமான லியோனல் மெஸ்ஸியை அருகில் பார்க்க முடியாததால் ஆத்திரம் அடைந்த இந்திய ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
லியோனல் மெஸ்ஸி 14 வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். அவரது மூன்று நாள் விஜயத்தில் ஒரு பகுதியாக இன்று சனிக்கிழமை (13) காலை கொல்கத்தா நகருக்கு சென்றிருந்தார்.
அங்கு அவருக்கு இந்திய கால்பந்தாட்ட ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டுக் கழகம் சார்பில் உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு மெஸ்ஸியின் 70 அடி உயர உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை காணொளி மூலம் திறந்துவைத்த மெஸ்ஸி, அங்கிருந்து சோல்ட் லேக் விளையாட்டரங்கிற்கு சென்றார்.
அங்கு மெஸ்ஸிக்கு 78,000 ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்பளித்தனர்.
எனினும் அவரைச் சுற்றி அதிகாரிகள் இருந்ததால் ரசிகர்களால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. மேலும் அவர் அரங்கை சுற்றி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை அருகில் பார்த்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால், மெஸ்ஸி இடைநடுவில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பி விட்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பனர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM