நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் - நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு

Published By: Digital Desk 1

13 Dec, 2025 | 12:06 PM
image

நாட்டின் 36 பிரதான நீர்த்தேக்கங்களிலும் 46க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்களிலும் தற்போது நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதான நீர்த்தேக்கங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களிலும்;, பதுளை மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களிலும்;, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களிலும் தற்போது நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 பிரதான நீர்த்தேக்கங்களிலும், கண்டி மாவட்டத்தில் உள்ள 2 பிரதான நீர்த்தேக்கங்களிலும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களிலும், மொனராகலை மாவட்டத்தில் உள்ள 1 பிரதான நீர்த்தேக்கத்திலும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 2 முக்கிய நீர்த்தேக்கங்களிலும், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய நீர்த்தேக்கங்களிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள 1 முக்கிய நீர்த்தேக்கத்திலும் நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் வெளியேற்றப்படும் நீரின் அளவு மிகக் குறைவானது. எதிர்காலத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து குறித்த நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மாறக்கூடும்.

எனவே, குறித்த நீர்த்தேக்கங்களின் கீழ்நிலைப் பகுதிகளிலுள்ள மக்கள் நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் குறித்த அறிவிப்புகளை  கவனிப்பது முக்கியம், தற்போது குறித்த நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு காரணமாக நீர்த்தேக்கங்களின் கீழ்நிலைப் பகுதிகளில் வெள்ள அபாயமோ அல்லது நீர் மட்டம் அதிகரிப்போ இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிகந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 28...

2026-01-12 21:46:26
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்கக்...

2026-01-12 18:24:12
news-image

நாட்டை மீண்டும் பின்தள்ளும் அரசின் புதிய...

2026-01-12 18:53:25
news-image

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம்...

2026-01-12 18:52:47
news-image

இலங்கையின் புதிய கல்விக் கொள்கையை ரத்து...

2026-01-12 18:16:28
news-image

கிளிநொச்சி - முரசுமோட்டை வீதியில் பஸ்ஸில்...

2026-01-12 19:17:40
news-image

“பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள்  பயன்படுத்தும் ஊழியர்களுக்கு...

2026-01-12 19:32:47
news-image

மன்னாரில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாத வீதி ;...

2026-01-12 18:15:34
news-image

டித்வா புயலுக்கு பிறகு முன்னணி போலந்து...

2026-01-12 19:21:54
news-image

துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரச நியமனம்...

2026-01-12 18:03:56
news-image

ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணித்...

2026-01-12 17:20:54
news-image

இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல்...

2026-01-12 17:19:16