நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் - நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு

Published By: Digital Desk 1

13 Dec, 2025 | 12:06 PM
image

நாட்டின் 36 பிரதான நீர்த்தேக்கங்களிலும் 46க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்களிலும் தற்போது நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதான நீர்த்தேக்கங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களிலும்;, பதுளை மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களிலும்;, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களிலும் தற்போது நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 பிரதான நீர்த்தேக்கங்களிலும், கண்டி மாவட்டத்தில் உள்ள 2 பிரதான நீர்த்தேக்கங்களிலும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களிலும், மொனராகலை மாவட்டத்தில் உள்ள 1 பிரதான நீர்த்தேக்கத்திலும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 2 முக்கிய நீர்த்தேக்கங்களிலும், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய நீர்த்தேக்கங்களிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள 1 முக்கிய நீர்த்தேக்கத்திலும் நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் வெளியேற்றப்படும் நீரின் அளவு மிகக் குறைவானது. எதிர்காலத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து குறித்த நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மாறக்கூடும்.

எனவே, குறித்த நீர்த்தேக்கங்களின் கீழ்நிலைப் பகுதிகளிலுள்ள மக்கள் நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் குறித்த அறிவிப்புகளை  கவனிப்பது முக்கியம், தற்போது குறித்த நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு காரணமாக நீர்த்தேக்கங்களின் கீழ்நிலைப் பகுதிகளில் வெள்ள அபாயமோ அல்லது நீர் மட்டம் அதிகரிப்போ இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54
news-image

2026ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 50...

2026-07-14 10:35:12
news-image

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி...

2026-07-14 10:21:51
news-image

அம்பாறையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய...

2026-07-14 10:00:06
news-image

போதைப்பொருள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட பொருட்களுடன் இளைஞன்...

2026-07-14 10:47:49
news-image

போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது!

2026-07-14 09:47:43