விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை பிணையில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ஙறம் நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.
சபுகஸ்கந்த பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பயணித்த ஜீப் வாகனம் வீதியில் பயணித்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் இரண்டு பெண்களும் குழந்தை ஒன்றும் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவனக்குறைவாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல வைத்தியசாலையில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை 02 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM