உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் வளங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் வெனிசுலா, தனது பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக மசகு எண்ணெய் உற்பத்தியை கொண்டுள்ளது.
இந்நிலையில், கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்தி செல்ல உதவியதாக வெனிசுலா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டின்படி, இந்த கடத்தலின் மூலம் ஈரானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு வருவாய் ஈட்ட உதவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்துவதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது.
ஆனால் அந்த தடையை மீறி, வெனிசுலாவில் இருந்து ஈரானுக்கு மசகு எண்ணெய் கொண்டு சென்ற கப்பல் ஒன்று பயணம் மேற்கொண்ட நிலையில், அதை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்தச் சூழலில், மசகு எண்ணெய் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் வெனிசுலா அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனம் ஒன்றுக்கும், அதனுடன் தொடர்புடைய ஆறு கப்பல்களுக்கும் அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தடைகள் மூலம், குறித்த நிறுவனம் மற்றும் கப்பல்களின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM