ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (12) 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 1 மீற்றர் (39 அங்குலம்) உயரத்துக்கு அலைகள் எழும்பக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் திங்கட்கிழமை இரவு 7.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமோரி மாகாணத்தின் கடற்கரையில் 20 கிலோ மீற்றர் (12 மைல்) ஆழத்தில் இன்றையதினம் அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணிக்கு (0244 GMT) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதன் பின்னர் வடக்கில் கொக்கைடோ முதல் டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா வரை வசிப்பவர்கள் ஒரு வாரத்திற்குள் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் விசேட எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.
இன்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பானின் 1-7 நில அதிர்வு தீவிர அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM