முசலியில் ஏற்பட்ட இடர் நிலையின் போது உரிய கடமையை செய்யவில்லை ; பிரதேச செயலாளருக்கு எதிராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

12 Dec, 2025 | 09:07 AM
image

நாட்டில் ஏற்பட்ட   புயலின் தாக்கம் காரணமாக   மன்னார் மாவட்டம்  முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்ட போதும் முசலி பிரதேச செயலாளர் மக்களுக்கு உரிய பணியை முன்னெடுக்கவில்லை என்றும்,இரவு பகல் பாராது கடமையை முன்னெடுத்த கிராம அலுவலர் ஒருவருக்கு எதிராக பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்தமைக்கு  எதிர்ப்பு தெரிவித்தும்  வியாழக்கிழமை (11) முசலி  பிரதேச அமைப்புக்கள் இணைந்து  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட   டித்வா  புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டம்  முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டது.

எனினும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  வேப்பங்குளம்,4ம் கட்டை ,மருதமடு,பிச்சைவானிபநெடுங்குளம் போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டது.

குறித்த கிராமங்களுக்கு தேவையான உடனடி அடிப்படை தேவைகளை வழங்குவதில் முசலி பிரதேச செயலாளர் அசமந்தமாக செயல் பட்டமை தொடர்பில் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இடம்  குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக வேப்பங்குளம் கிராம பள்ளி வாயில் நிர்வாகம் ,கிராம அபிவிருத்தி அமைப்பு ,விவசாய அமைப்பு, இளைஞர் அமைப்பு என 10 க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து  நேற்று  மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

இதேவேளை குறித்த கிராமத்தின் கிராம அலுவலர்  அனர்த்தம் ஏற்பட்ட தினத்தில் இருந்து இரவு பகலாக மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததுடன் குறித்த கிராம சேவகருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிராகவும்  கண்டனம் தெரிவித்து அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தியதுடன் மீண்டும் கிராம சேவகராக   அவரையே  தமது கிராமத்திற்கு கடமைக்கு அமர்த்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதோடு தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை...

2026-03-06 18:37:25
news-image

நமது கடல் எல்லையருகில் ஈரான் கப்பல்...

2026-03-06 17:15:08
news-image

அரசுக்கு எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...

2026-03-06 17:31:52
news-image

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில்...

2026-03-06 20:18:05
news-image

இலங்கை கடல் எல்லை அருகே ஈரான்...

2026-03-06 19:59:13
news-image

ஈரான் கப்பல்கள் வருகை: கடற்படை தளபதி...

2026-03-06 19:18:33
news-image

பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை...

2026-03-06 18:35:28
news-image

“க்ளீன் ஶ்ரீ லங்கா” திட்டம் :...

2026-03-06 18:38:26
news-image

இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை...

2026-03-06 18:22:46
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை...

2026-03-06 17:55:34
news-image

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான...

2026-03-06 17:14:33
news-image

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம்...

2026-03-06 17:06:31